கொழும்பில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - தெஹிவளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாநகர சபையில் பணிபுரியும் 45 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பிரதேசத்திற்கு இன்று (20) காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்

இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.