யாழில் வீட்டில் உறங்கிகொண்டிருக்கும்போது நடந்த அசம்பாவிதம்... குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் வீட்டில் உறங்கிகொண்டிருக்கும்போது நடந்த அசம்பாவிதம்... குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - காத்தான்குடி பகுதியில் கட்டிலிலிருந்து கீழே விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் வீட்டில் உறங்கிகொண்டிருக்கும்போது நடந்த அசம்பாவிதம்... குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! | Family Member Fell Off The Bed In Jaffna And Died

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது அறையில் உறங்கிக்கொண்டு இருந்தவேளை நேற்றிரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்

இதனையடுத்து, விழுந்தவர் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் வீட்டில் உறங்கிகொண்டிருக்கும்போது நடந்த அசம்பாவிதம்... குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! | Family Member Fell Off The Bed In Jaffna And Diedஇருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.