5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கிடைக்காததால் சமூர்த்தி அலுவலக கூரையின் மீதேறிய இரண்டு விவசாயிகள் (காணொளி)

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கிடைக்காததால் சமூர்த்தி அலுவலக கூரையின் மீதேறிய இரண்டு விவசாயிகள் (காணொளி)

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்காத காரணத்தினால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வரையில் இரண்டு விவசாயிகள் இன்று மாலை சமூர்த்தி காரியாலயத்தின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 650 குடும்பங்களைச் சேர்ந்த தமது கிராம சேவக பிரிவில் உள்ள 602 பேருக்கு அரசாங்கம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும் 48 குடும்பங்களுக்கு குறித்த தொகை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 5,000 ரூபா கொடுப்பனவு பெறாத ஏனைய குடும்பத்தினரும் சமூர்த்தி காரியாலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.