விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்! ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்! ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து இடம்பெற்று 45 நிமிடங்கள் கடந்த போதும், வீதியால் சென்ற எவரும் உதவி செய்யாமையால் குறித்த இளம் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்! ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு | Pregnant Woman Died In An Accident Panadura

மேலும், விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய் அழைத்துச் செல்லப்படாததால் அவரும் அவரது 7 மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் உயிரிழந்த பெண்ணுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

“ஒரு குழந்தையின் தாயும், ஒரு மாணவியுமான குறித்த கர்ப்பிணி, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்! ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு | Pregnant Woman Died In An Accident Panadura

 

மூத்த மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர் பாடசாலைக்கு அழைத்து வீடு திரும்பும் போது இந்த விபரீதம் நடந்துள்ளது.

விபத்து நடந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாணந்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வராததுதான் இங்கு மிகவும் கொடுமை

நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் அந்த வீதியில் யாராவது முன் வந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், அவரையும், குழந்தையின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்! ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு | Pregnant Woman Died In An Accident Panadura

மேலும், முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தை பார்த்து, பலரும் விபத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்தை பலர் வாகனங்கள் நிறுத்தி வேடிக்கை பார்த்துள்ளனர்.