யாழில் குழந்தையையும் கணவனையும் தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்!

யாழில் குழந்தையையும் கணவனையும் தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்!

யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு , சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும் , காதலனையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் குழந்தையையும் கணவனையும் தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்! | Girl Left Her Husband And Child In Yali Lover

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலனுடன் ஊரை விட்டு சென்று இருந்தார்.

இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழில் குழந்தையையும் கணவனையும் தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்! | Girl Left Her Husband And Child In Yali Lover

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும் , அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.