இழுபறியில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணில் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

இழுபறியில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணில் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தன்னிடம் பணமில்லை என கூறும் சிறிலங்கா அதிபர், ஒரு குழுவிற்கு கொடுப்பனவுகளை வழங்கி அரச சேவையில் முரண்பாடுகளை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எனினும், நாட்டில் தொழிற்சங்க அமைப்புகள் அதிபரின் முடிச்சுகளில் சிக்குவதற்கு தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தல் வரையில் எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்பும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இழுபறியில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணில் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு | Salary Increase Issue Of Govt Employees

மேலும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமது கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக பதவியேற்கும் வரையில் எந்தவொரு வேலை நிறுத்தத்திற்கும் தமது கட்சி ஆதரவளிக்காது எனவும் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.