மான் கொம்பு கடத்திச் சென்ற நபர் கைது
கிளிநொச்சியில் (Kilinochchi) இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) மான் கொம்பை கடத்தி சென்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (24.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

