பரந்தன் அஞ்சல் அலுவலகத்தில் திருட்டு முயற்சி

பரந்தன் அஞ்சல் அலுவலகத்தில் திருட்டு முயற்சி

கிளிநொச்சி - பரந்தன் அஞ்சல் அலுவலகத்தில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 02ஆம் திகதி பூட்டிய தபாலகத்தை இன்று காலை வந்து திறந்த போதே பாதுகாப்பு பெட்டகம் கோடரி கொண்டு உடைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைப்பதற்காக பயன்படுத்திய கோடரியை திருடர்கள் விட்டு சென்றுள்ளனர். திருடர்கள் பெறுமதியான எந்தப்பொருளையும் திருடவில்லை என பரந்தன் தபால் நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.