திடீரென தீப்பற்றி எரிந்த உந்துருளி – மட்டக்களப்பில் சம்பவம்

திடீரென தீப்பற்றி எரிந்த உந்துருளி – மட்டக்களப்பில் சம்பவம்

பயணித்துக்கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 12 மணியளவில் மட்டக்களப்பு நகரில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளி ஒன்றே தானாக தீப்பற்றி எரிந்துள்ளது. ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக காத்தான்குடி நோக்கிச் சென்றவரின் உந்துருளியே இவ்வாறு திடீர் என தீப்பிடித்துள்ளது.

இதன்போது உந்துருளியை செலுத்திச் சென்றவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மேலும் குறித்த பகுதியில் நின்றவர்களினால் உந்துருளியில் இருந்த தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.