மேல் மாகாணத்தில் 237 பேர் கைது

மேல் மாகாணத்தில் 237 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதை பொருள் மற்றும் வேறு குற்றச்சாட்டு தொடர்பில் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹெரோயின் போதை பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார் குறித்த நபர்கள் வெள்ளம்பிட்டிய, பொரளை, கிரேன்பாஸ், புறக்கோட்டை மற்றும் பாணந்துறை தெற்கு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.