நீரில் மூழ்கிய இளம் தம்பதி : காப்பாற்ற சென்ற பிரதேசவாசி : பின்னர் நடந்த துயரம்..!

நீரில் மூழ்கிய இளம் தம்பதி : காப்பாற்ற சென்ற பிரதேசவாசி : பின்னர் நடந்த துயரம்..!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதியை காப்பாற்ற முயற்சித்த நபரும் இன்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திகன, கும்புக்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற முன் வந்த 30 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவரும் நீரில் மூழ்கி இறந்தார்.

உயிரிழந்த கணவரின் வயது 28 எனவும் மனைவியின் வயது 22 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தில் இறங்கிய அப்பெண் திடீரென நீரில் மூழ்கினார். அவளைக் காப்பாற்ற கணவனும் நொடியில் நீர்த்தேக்கத்தில் இறங்கினான்.

நீரில் மூழ்கிய இளம் தம்பதி : காப்பாற்ற சென்ற பிரதேசவாசி : பின்னர் நடந்த துயரம் | Victoria Tragedy Claims 3 Livesஎனினும், வெள்ளத்தில் சிக்கி இருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை காப்பாற்ற பிரதேசவாசி ஒருவரும் நீரில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது முதலில் மனைவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர்களைக் காப்பாற்றச் சென்ற கணவன் மற்றும் பிரதேசவாசியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

நீரில் மூழ்கிய இளம் தம்பதி : காப்பாற்ற சென்ற பிரதேசவாசி : பின்னர் நடந்த துயரம் | Victoria Tragedy Claims 3 Lives