திடீரென பற்றி எரிந்த இரு சொகுசு பஸ்களால் பரபரப்பு!
மாத்தறையின் கெகனதுர வெஹரஹேன வீதியில் உள்ள காணி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சொகுசு பஸ்கள் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தீயில் எரிந்த இரு சொகுசு பஸ்களும் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுபவை என தெரிய வந்துள்ளது.
இரு சொகுசு பஸ்களும் தீப்பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிகள் விசாரணைகள் முன்னெடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.