விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்..!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்..!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.

குறித்த வைப்புத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுபோக நெற்செய்கைக்காக வரையறுக்கப்பட்ட உர நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு சலுகை விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.