கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை - சந்தேக நபரின் விபரீத முடிவு..!
மாத்தறையில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை சம்பவம் மாத்தறை - ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய ஆசிரியை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலையைச் செய்த சந்தேக நபர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .