தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை கோர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 2376 இற்கமைய, நேற்றைய தினம் (15) அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Application For National Colleges Of Educationமேலும், தகுதியானவர்கள் தேர்வும் இம்முறை இணையவழி ஊடாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (15) மதியம் 12 மணியிலிருந்து இணையவழி ஊடாக விண்ணப்பிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்ப காலம் 05.04.2024 அன்றுடன் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.