தகாத உறவால் இடம்பெற்ற பயங்கரம்; சந்தேக நபருக்கு வலைவீச்சு

தகாத உறவால் இடம்பெற்ற பயங்கரம்; சந்தேக நபருக்கு வலைவீச்சு

தகாத  உறவில்   ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பெண்  கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலுகொல்லாகம, மீகொடவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தகாத உறவால் இடம்பெற்ற பயங்கரம்; சந்தேக நபருக்கு வலைவீச்சு | Terror In Southern Lanka Over Family Disputeசடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பலுகொல்லாகம - மெகொடவெவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. நேற்றிரவு (14) இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

திருமணமாகாத இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, இளைஞன் போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  சந்தேகநபர்  பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.