தெற்கில் இன்று அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்..!

தெற்கில் இன்று அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்..

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (14) அதிகாலை இடந்தோட்டை - பொனதுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான 'சமன்கொல்லா' என்ற அகம்பொடி சஜித் சமன் பியந்தவின் வீட்டின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தெற்கில் இன்று அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் | Gun Shooting Incident In Ambalangodaதுப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளது.

மேலும், சம்பவத்தின் போது சமன்கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

தெற்கில் இன்று அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் | Gun Shooting Incident In Ambalangodaஇந்நிலையில் தென் மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது