3000 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்படும் மின்கட்டணம்.!

3000 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்படும் மின்கட்டணம்.!

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் 

மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் குறைக்கப்படுவதுடன், 30 அலகுகளுக்கு குறைவான பிரிவில் பாவனையாளர்களுக்கு அலகுகளுக்கான கட்டணம் 33 வீதத்தால் குறைக்கப்படும்.

3000 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்படும் மின்கட்டணம் | Electricity Bill Reduced From Rs3000 To Rs800

31 மற்றும் 60 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 28 சதவீதத்தால் குறைந்துள்ளதுடன்  60 முதல் 90 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைகின்றது.

90 மற்றும் 180 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 24 சதவீதம் குறைந்துள்ளதுடன் 180 அலகுளுக்கு மேல் உள்ள வீட்டு மின் பாவனை பிரிவினருக்கு மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படுகின்றது.

3000 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்படும் மின்கட்டணம் | Electricity Bill Reduced From Rs3000 To Rs800

இதேவேளை வழிபாட்டுத் தலங்களுக்கு 33 சதவீத குறைப்பு வழங்கப்படுவதுடன் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளின் மின் கட்டணம் 18 சதவீதத்தினால் குறைவடைகின்றது.

பொது நோக்கம் பிரிவில் 23 சதவீத குறைப்புடன் பொதுத்துறைக்கு 22 சதவீதம் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் வீதி விளக்குகளுக்கு 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.