வெளிநாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரிப்பு

வெளிநாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரிப்பு

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு  கென்யா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரித்து வருவதாக  தெரிவித்துள்ளது.

அதன்படி, கென்யாவிலிருந்து 10,000 மெற்றிக் டன் அரிசிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மத்திய கிழக்கின் பல நாடுகளும் கீரி சம்பா அரிசிக்கான வேண்டுகோள் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரிப்பு | Increasing Demand For Sri Lankan Rice Abroad