இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு..

இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு..

இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் ஹோமாகம காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்கு 13 வயதான சகோதரர்களை மருத்துவ சிகிச்சை அளிக்கும் போர்வையில் தகாத முறைக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

குறித்த பிக்கு சடங்கு ஒன்றை நிறைவேற்றவேண்டுமென்பதற்காக குறித்த சிறுவர்களை தன்னுடன் சில காலம் இருக்குமாறு அவர்களின் பெற்றோருக்கு அந்த பிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையிலே அந்த சகோதரர்கள் தகாத முறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிக்கு மாந்திரீகத்திலும் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் சந்தேகநபர் ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.