அணுகுண்டு தாக்குதலை எதிர்கொள்ள தயார் : இலங்கை அதிரடி அறிவிப்பு
பிராந்தியத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமையை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபை தெரிவித்துள்ளது.
அதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் உபகரணங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கொட்டகொட தலைமையில் இந்த சபை கூடியது.