தொடர்மாடிக் குடியிருப்பிலிருந்து வீழ்ந்த மூதாட்டி

தொடர்மாடிக் குடியிருப்பிலிருந்து வீழ்ந்த மூதாட்டி

 கொழும்பு - பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் மூதாட்டி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிலகிரிய அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றின் 7 ஆவது மாடியில் இருந்து விழுந்தமையினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்மாடிக் குடியிருப்பிலிருந்து வீழ்ந்த மூதாட்டி | Fell From Her Apartment Continuously

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயதான  ஜெயானந்தன் வேலு அம்மா மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.