
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை (NIC) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஒரு நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விண்ணப்பம் கோரலின் போது, அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை.
இம்முறை விண்ணப்பிக்கும் போது அடையாள அட்டை இலக்கத்தை கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் எதிர்வரும் (15.03.2024) ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.