கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

பாணந்துறை கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பாக உயிருடன் மீட்டுள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் நேற்றையதினம் (12-02-2024) கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி மூழ்கியுள்ளனர்.

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்! | Students Drowning Panadura Sea Were Rescued Alive

சம்பவத்துடன் தொடர்பில் தகவலறிந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.

கடலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்! | Students Drowning Panadura Sea Were Rescued Aliveஇதேவேளை, பாணந்துறை கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தசுன் ஆகியோர் குழுவைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.