குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் எனவும் நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி மானியம் வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம் | 20 Kg Rice For Low Income Families