பாடசாலை சென்ற சிறுவனுக்கு எமனான மரம்
கண்டி - கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 5 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதேவேளை இந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
