மகாவலி கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (03-02-2024) பேராதனை - ஹிந்தகல பகுதியில் உள்ள மகாவலி கங்கையில் நீராடச் சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையின் உயிர்காப்பு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.