சூரிய பெயர்ச்சி; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள்

சூரிய பெயர்ச்சி; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள்

நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதி.

இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் எதிர்வரும் (13.02.2024)  சூரியன் சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார்.

சூரியனும், சனி பகவானும் தந்தை-மகன் உறவைக் கொண்டிருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகிறார்கள்.

எனவே சூரியன் சனி பகவானின் ராசியில் பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்யக்கூடாது.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் நிறைய நிதி இழப்பையும், தொழிலில் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

அதோடு சமூகத்தில் மரியாதை குறைவும் சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய வாக்குவாதங்களிலும் ஈடுபடலாம்.

இப்போது கும்பம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சிரமங்கள் அதிகரிக்கலாம்.

அதோடு மன அழுத்தத்தாலும் அவதிப்படலாம். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அந்த கோபமே பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

வியாபாரத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

பேச்சில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதையும் சிந்தித்து பேச வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்காது.

உங்களின் திட்டங்களை மாற்ற வேண்டும். சற்று நம்பிக்கையின்மையைக் கொண்டிருப்பீர்கள்.

தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். ஆகவே நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சில காரணங்களால் பண பற்றாக்குறையை சந்திக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை மாற்ற வேண்டிவரும்.

வேலையில் சரியாக கவனத்தை செலுத்த முடியாது.

வேலை தொடர்பாக நிறைய பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். பணத்தை நன்கு சம்பாதிப்பீர்கள்.

ஆனால் அந்த பணத்தை சேமிக்க முடியாது. சில விஷயங்களில் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.