
தொடருந்து பொதி போக்குவரத்து கட்டணம் 80 சதவீதத்தால் அதிகரிப்பு!
தொடருந்தில் கொண்டு செல்லப்படும் பொதிகளுக்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தொடருந்து போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்தில் கொண்டு செல்லப்படும் பொதிகளுக்கு இதுவரை 50 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் இன்று முதல் குறித்த கட்டணம் 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.