
இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்திருந்த நிலையில், அமைச்ரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் இதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.