நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (23.01.2024) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று (23) சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் | Sri Lanka Parliament Session Start Today

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாளை முதல் சமூக ஊடக நிறுவனங்கள் இலங்கை அரச நிறுவனங்களுடனான அனைத்து தகவல் தொடர்பு மற்றும் கூட்டுத் தொடர்புகளையும் துண்டிக்க வாய்ப்புள்ளது என பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.