கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்; யாழில் பதிவான சம்பவம்

கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்; யாழில் பதிவான சம்பவம்

யாழ் - பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார்.

இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்று (20.01.2024) காலை 09.00 மணியளவில் கதிரையில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் காலை 9.30 மணியளவில் அவரது சகோதரி அவரை எழுப்ப முற்பட்டவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார்.

கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்; யாழில் பதிவான சம்பவம் | Death In Jaffnaஅவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.