பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்!

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்!

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி  நேற்று முன் தினம் (17) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்! | Fraud Unmarried Couple Caught By The Policeசம்பவத்தில்  கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது: 46) வத்தளையைச் சேர்ந்த சுபாஷ் செல்வராணி (வயது: 39) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலும் கூறியுள்ளதாவது, 

கடந்த 31ஆம் திகதி மிதியகல தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண்டாரவளை நகருக்கு  வந்தபோது மோசடி தம்பதிகள்  பெண்ணிடம் நயமாக பேசி   பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

 இதன்போது  பெண் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதை அடையாளம் கண்டுகொண்டதை அடுத்து ,  பெண்ணுக்கு தைக்கப்பட்ட சில ஆடைகளை கொடுத்துள்ளனர். அதனை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு அலைபேசி இலக்கமொன்றையும் கொடுத்துள்ளனர்.

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்! | Fraud Unmarried Couple Caught By The Policeஇந்நிலையில்   ஆடைகளை சிலவற்றை விற்பனை செய்துவிட்டு, சில ஆடைகள் மீதம் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மறுமுனையில் பதிலளித்த தம்பதியினர், மீதமிருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு வருமாறு கூற , பெண் தனது மகனுடன் நுவரெலியாவிற்கு  சென்றுள்ளார்.

பெண்ணை   நுவரெலியா பொது சந்தைக்கு அருகில் வருமாறு கூறிய ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். பயண சோர்வை களைப்பதற்காக, ரோல்ஸ் மற்றும் இனிப்பு பானத்தை கொடுத்துள்ளனர்.  தாயும் மகனும்  அவற்றை வாங்கி பருகியதை அடுத்து   அவர்கள்  சுயநினைவை இழந்தனர்.

அவர்கள் சுயநினைவு திரும்பியபோது, ​​  நுவரெலியா பொது மருத்துவமனையில்  இருந்துள்ளனர்.  இந்நிலையில்  அவர்களிடம்  பொலிஸார் நடத்திய விசாரணையில், மோசடி தம்பதி குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்! | Fraud Unmarried Couple Caught By The Police

அதோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் தங்க வளையல், ஒரு ஜோடி காதணி, சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 5000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி மற்றும் 5000 ரூபாய் பணமும்  அவரது மகன் வைத்திருந்த விலையுயர்ந்த அலைபேசி என்பனவும் காணாமல் போயுள்ளன.

சந்தேகநபர்களின் அடையாளம் தெரியவில்லை என தாயும் மகனும் கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சுற்றிலும் உள்ள பல கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகநபர்கள்  பன்னில பிரதேசத்தில் இருந்தும், பெண் வட்டவளை பிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, சந்தேநபர் மூன்று மாதங்கள் சிறையிலிருந்து ​​சில தினங்களுக்கு முன்னர், வெளிவந்து  சட்டவிரோத கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும், பல இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை ஜாஎல, குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர் மற்றும் சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்  கைதான இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் (18) ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் 29 ஆம் திகதி வரையிலும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.