அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்! அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல்

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்! அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல்

அரச ஊழியர்களில் அதிகமானவர்கள் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்தே பணியாற்றுகிறார்கள். எனினும், இனி அவ்வாறு இருப்பதற்கான அவசியம் இல்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல நிறுவனங்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

ஏதாவது ஒரு நிறுவன பிரதானி அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் அவசியம் ஏற்பட்டால் அதற்கு எவ்வித தடையும் இல்லை. அனைத்து ஊழியர்களையும் அழைத்து வருவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அரச ஊழியர்களில் அதிகமானோர் கடந்த 3 மாத காலங்களாக வீட்டில் உள்ளனர். இனி அவ்வாறு இருப்பதற்கான அவசியம் இல்லை. இன்று முதல் பொது போக்குவரத்து சேவை வழமையை போன்று இயங்கும் என்பதனால் அரச ஊழியர்களின் போக்குவரத்து தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என்றார்.