மூன்று மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட வகுப்பாசிரியர் கைது!

மூன்று மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட வகுப்பாசிரியர் கைது!

நுவரெலியாவில் பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதன் பேரில் அதே பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த மாணவிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளையும் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு, பாடசாலையில் 9 ஆம் தரத்தின் பொறுப்பான ஆசிரியரும் இவரே என்றும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட வகுப்பாசிரியர் கைது! | Teacher Arrested In Nuwara Eliya For Rape Case மேலும், அவர் வாட்செப் செயலியின் ஊடாக நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்ததையடுத்து அவரது தொலைபேசியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (21) வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிக்கிலகஸ்கட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்ட வகுப்பாசிரியர் கைது! | Teacher Arrested In Nuwara Eliya For Rape Caseஇந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.