வடக்கில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பாடசாலைகள் முடக்கம்.
தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக வடக்கு மாகாணத்தில் இன்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டமையாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் இன்று கற்றல் செயற்பாடுகளுக்காக இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கில் தொடர்ந்தும் அதிக மழை பெய்வதால் நாளை மேலும் பல பாடசாலைகள் இயங்க முடியாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.