
மது போதையில் முச்சக்கர வண்டி ஓட்டிய பெண்.
கண்டி - மஹியங்கனை வீதியில் மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச்சென்ற பெண் ஒருவர் தெல்தெனிய போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு போதையில் சென்றவர் கண்டி - தெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணாவார்.
தெல்தெனிய ஆதார வைத்தியசாலையிலிருந்து இவரது மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான பெண் தெல்தெனிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.