ஒரேகுடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக; பலாங்கொடயில் துயரம்.

ஒரேகுடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக; பலாங்கொடயில் துயரம்.

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் நேற்று முன்தினம் (13) ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.

ஒரேகுடும்பத்தை சேந்த நால்வர் சடலங்களாக; பலாங்கொடயில் துயரம் | A Family Of Four Dead Landslide In Balangodaஅனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.