பொலிஸாரால் கைதுசெய்யபட்ட நபர் திடீரென மரணம்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்.
தொடங்கொடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12-11-2023) கைது செய்யப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடங்கொடை வெனிபெல்கட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே சட்டவிரோத மதுபானத்துடன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அவரை களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.