க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு : கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு!
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்றையதினம் (10-11-2023) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.