யாழில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் கொட்டித்தீர்த்த மழை.

யாழில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் கொட்டித்தீர்த்த மழை.

யாழ்ப்பாணத்தில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் அதிக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நிலவிய அசாதாரண வெப்பநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விலங்குகள் உட்பட மனிதர்களும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வெப்பத்தால் நீர் நிலைகள் வரண்டு போயிருந்ததோடு பயிர்கள் நீரில்லாமல் கருகிப் போயிருந்தன.

யாழில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் கொட்டித்தீர்த்த மழை | Rains In Jaffna After A Gap Of Long Monthsஅதுமட்டும் அன்றி குடிநீருக்கு கூட தட்டுப்பாடு நிலவி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் சில பகுதிகளிலும் மழை பெய்து வந்தது.

ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக வெப்பமே நிலவி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் திருப்திகரமான மழை வீழ்ச்சி பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.