
இலங்கைக்கு சுற்றுலா வந்த கனடா சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை..!
இலங்கைக்கு சுற்றுலா வந்த கனடா நாட்டு சிறுவர்கள் இருவர் மோசமான நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவை சேர்ந்த 16 வயதான சிறுமியும் ,சிறுவனும் அவர்களது, தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையிலேயே இந்த மோசமான அனுபவத்தை பெற்றுள்ளனர்.
இவர்கள் தமது சுற்றுலாவின் போது, கொஸ்கொடையில் இருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்காக வானில் பயணித்துள்ளனர். இதன்போது இரண்டு சிறுவர்களையும் சுற்றுலா வழிகாட்டி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் , தப்பிச் சென்றுள்ள சுற்றுலா வழிகாட்டியதான சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.