யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி..!

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி..!

யாழ்ப்பாணம் வலிகாமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 25 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டதாக முறைப்பாடு ஒன்று  பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, இத்தாலியில் வசிக்கும் ஒருவர் வெளிநாட்டுக்கு எடுப்பதாக கூறிய நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.

இளைஞனுடன் சகல விபரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.

குறித்த விசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது குறித்த வேலை வாய்ப்புக்கான விசா போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன், இத்தாலியில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பிரதான சூத்திரதாரி.

இவர் முல்லைத்தீவு  பெண் ஒருவரை முதலில் திருமணம் செய்து இரு பிள்ளைகள் இருப்பதாகவும் பின்னர் அவர்களை கைவிட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை மறுமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.