ஒரே நேரத்தில் மயக்கமுற்ற 13 மாணவர்கள் - கேகாலையில் சம்பவம்..!
ஒரே நேரத்தில் 13 மாணவர்கள் மயக்கமுற்ற சம்பவம் கேகாலையில் இடம்பெற்றுள்ளது.
எட்டியாந்தோட்டை களனி தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில், கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஒரு சில மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் மாணவர்கள் மயக்கமுற்றமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.