11 வயதான மகள் பாலியல் வன்புணர்வு - தந்தைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு..!
11 வயது சிறுமியான தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 15 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார நேற்று (14) அந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தார். இங்கிரிய புனித பேதுரு கொலனியில் வசிக்கும் 50 வயதான வசந்த பெரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 5,000 ரூபா அபராதம் விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குறித்த தண்டப்பணத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஒரு மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 01 ஜூன் 2007 அன்று அல்லது அதைச் சுற்றி தனது முதல் திருமணத்திலிருந்து 11 வயது சிறுமியாக இருந்த தனது மனைவியின் மகளுக்கு இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.
தந்தையின் பாசத்திற்கு தகுதியான சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், சமூகத்திற்கு ஒரு செய்தியை தெரிவிக்கும் வகையில் அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் முன்னிலையான அகலங்க பாலபட்டபெண்டி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதார பெரேரா, சந்தேகநபருக்குக் குறைந்த தண்டனை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தைக் கோரினார்.