
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2730 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் 2 ஆயிரத்து 48 பேர் இந்த வைரஸிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 671 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அதேநேரம் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.