யாழில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு..!

யாழில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் (28.05.2023) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.