யாழில் பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் - நையப்புடைத்த மக்கள்..!

யாழில் பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் - நையப்புடைத்த மக்கள்..!

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பலாலி காவல்துறையினர் மற்றும் இராணுவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேட்டையில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து காவல்துறையில் ஒப்படைத்ததுள்ளனர்.