தனது மார்பகங்கள் குறித்து சர்ச்சையை கிளப்பிய கபாலி நடிகை!

தனது மார்பகங்கள் குறித்து சர்ச்சையை கிளப்பிய கபாலி நடிகை!

தான் திரைப் பயணத்தை தொடங்கிய போது தன்னுடைய மார்பகங்கள் பெரிதாக இல்லை என பலர் தன்னை விமர்சித்தாக கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. Vaah! Life Ho Toh Aisi! என்ற இந்தி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் ராதிகா ஆப்தே. பொலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ராதிகா ஆப்தே தொடர்ந்து பெங்காலி, மராத்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராதிகா ஆப்தே.

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா ஆகியோரது நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடித்தார் ராதிகா ஆப்தே.

தொடர்ந்து வெற்றி செல்வன் படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்தார் ராதிகா ஆப்தே. தற்போது பொலிவுட் மற்றும் ஹொலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

அடிக்கடி ராதிகா ஆப்தேவின் அந்தரங்க போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வரும். ராதிகா ஆப்தேவும் துணிச்சலாக பல கருத்துக்களை பேசி கவனத்தை பெற்று வருகிறார். இந்நிலையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டி ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் தான் திரைப்பயணத்தை தொடங்கிய போது எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதாவது பொலிவுட்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கிய போது தனது மூக்கின் அமைப்பு சரியாக இல்லை என்றும் தனது மார்பகங்கள் பெரிதாக இல்லை என்றும் விமர்சித்தார்கள் என்றும் கூறியுள்ளார். மார்பகங்ளை பெரிதாக்கி கொண்டு நடிக்க வாருங்கள் என்றும் தனக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

மேலும் தனது உடல் எடை 3 முதல் 4 கிலோ அதிகரித்ததால் பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பதை சிலர் தங்களின் உரிமையாகவே கருதுவார்கள் என்றும் கூறியுள்ள ராதிகா ஆப்தே, இப்போது யாராவது அப்படி பேசினால் அவர்களை சுட்டுவிடுவேன் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.