யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத்தடை

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத்தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத்தடையும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளின் போது, 3ஆம் வருட மாணவர்களால், 2ஆம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான முறையில் விசாரணையை மேற்கொள்வதற்காக நான்கு பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் அறிவித்துள்ளார்.

அங்கு கலை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மூன்றாம் வருட மாணவர்களுக்கும், இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி, கடந்த 23ஆம் திகதி மோதல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தின் போது காயங்களுக்கு உள்ளான இரண்டாம் வருட மாணவன் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த நான்கு மாணவர்களுக்கும் அதில் தொடர்புள்ளமை தெரிய வந்துள்ளது.